மேற்கு வங்காளத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 67 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மக்களுக்கு தலத்திருச்சபை உதவி
சூன்18,2009. இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கடந்தமாத இறுதியில் பெரும்புயல் மற்றும்
மழையால் பாதிக்கப்பட்ட 67 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கான உதவிகளை
அரசு அமைப்புகளுடன் இணைந்து வழங்கி வருகிறது தலத்திருச்சபை.
மூன்று மாவட்டங்களில்
பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 61 ஆயிரம் பேருக்கான நிவாரணப் பொருட்களை ஐ.நா.வின் யூனிசெப்
அமைப்பிடமிருந்து பெற்று முதல் கட்டமாக வழங்கியுள்ளதாக உரைத்த மறைமாவட்ட அமைப்புகள்,
கத்தோலிக்க காரித்தாஸ் இந்தியா 12 இலட்சம் ரூபாயையும் ஒதுக்கியுள்ளதைக் குறிப்பிட்டன.
தலத்திருச்சபை மற்றும் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் உதவியுடன் 569 நிவாரண முகாம்கள்
அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, குடிநீர், விரிப்புகள் மற்றும் மருந்துப்
பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கான நிவாரணப் பணிகளின் ஒருங்கமைப்பாளராகப் பணியாற்றுமாறு அரசுசாரா அமைப்புகளால்
தேர்வு செய்யப்பட்டுள்ளார் ராய்ஜங் மறைமாவட்ட குரு புதுமை நசரேன்.