2009-06-13 15:11:36

உலகில் ஏழைகளும் பசியால் வாடுவோரும் என்றுமில்லாத அளவுக்கு மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர், உலக உணவு திட்ட அமைப்பு


சூன்13,2009 உலகில் ஏழைகளும் பசியால் வாடுவோரும் என்றுமில்லாத அளவுக்கு மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் எச்சரித்தார்.

ஜி8 என்ற தொழிற் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் தென் இத்தாலியின் லெச்சேயில் இன்று நிறைவு செய்த கூட்டத்திற்கு செய்தி அனுப்பிய உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் ஜொசெட்டெ ஷீரன் உலகில் ஆறு பேருக்கு ஒருவர் வீதம் பசியால் துன்புறுகின்றனர், ஆறு வினாடிகளுக்கு ஒரு குழந்தை வீதம் இறக்கின்றது, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளில் 80 விழுக்காட்டினர் உணவுப் பொருட்களின் கடும் உணவு விலையேற்றத்தை எதிர்நோக்குகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் பசிக்கொடுமை உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ஷீரன் அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதிக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏறத்தாழ 45 கோடி டாலர் தேவைப்படும் என்றும் உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.