2009-06-12 14:26:04

வரலாற்றில் சூன்13


புனித பதுவை அந்தோணியார் விழா. 1195ம் ஆண்டில் போர்த்துக்கல்லின் லிஸ்பனில் பிறந்து தன் 15ம் வயதிலேயே அகஸ்டினீயன் துறவியான இவர் பின்னர் தனது 26 வது வயதில் கப்புச்சின் துறவு சபையில் இணைந்தார். மொரோக்கோவுக்குப் பணிபுரிய கப்பலில் சென்ற போது உடல் சுகவீனமுற்று இத்தாலியில் கரையிறங்கினார். அங்கேயே பிரபல போதகராகவும் புதுமைகள் ஆற்றுபவராகவும் அறியப்பட்டார். தனது 36ம் வயதில் 1231ம் ஆண்டு சூன் 13ல் இத்தாலியின் பதுவையில் காலமானார் அந்தோணியார். இவர் இறந்த ஓராண்டிற்குள்ளேயே திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

சூன்13, 1997ல் புதுடெல்லி திரையரங்கு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.








All the contents on this site are copyrighted ©.