அக்காலத்தில் இயேசு கூறியது - மேலும், ″ பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை
ஆண்டவருக்குச் செலுத்துவீர் ″ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்கள்.34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்
மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்;
ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.36
உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ
கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.37 ஆகவே நீங்கள் பேசும்போது ' ஆம் ' என்றால் ' ஆம் ' எனவும்
' இல்லை ' என்றால் ' இல்லை ' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும்
தீயோனிடத்திலிருந்து வருகிறது.