நீதி மற்றும் அமைதிக்கான விவகாரங்களில் ஈடுபடுவது நற்செய்திப்பணிக்குத் தேவையானது, ஹங்கேரி
பேராயர்
சூன்11,2009. நீதி மற்றும் அமைதிக்கான விவகாரங்களில் ஈடுபடுவது நற்செய்திப்பணிக்குத்
தேவையானது என்று ஹங்கேரி நாட்டு எஸ்டெர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கூறினார்.
குரோவேஷிய
நாட்டு சாக்ரெப்பில் ஐரோப்பாவில் சமூக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயர்களுக்கு நடந்த
கூட்டத்தில் பேசிய கர்தினால் பீட்டர் எர்டோ, ஒருங்கிணைந்த மனிதனின் நலத்திற்காகத் திருச்சபை
தொடர்ந்து உழைக்கும் என்று தெரிவித்தார்.
நீதி மற்றும் அமைதி குறித்த விவகாரங்கள்
திருச்சபையின் நற்செய்திப்பணிக்குச் சொந்தமானவை என்றுரைத்த அவர், சமூக விவகாரங்களிலிருந்து
மேய்ப்புப் பணியையோ அல்லது நற்செய்திப் பணியையோ பிரிக்க முயற்சிப்பது பெரும் தவறாகும்
என்றும் அவர் எச்சரித்தார்.
திருச்சபையின் பணிகள் இறைவனின் அன்பில் வேரூன்றியதாக
இருப்பதால் அவை நீதியையும் அமைதியையும் பாதுகாப்பதாக இருக்கின்றன என்றும் புடாபெஸ்ட்
பேராயர் கர்தினால் எர்டோ கூறினார்.