2009-06-10 15:37:41

தென் கொரியாவில் ஐம்பது இலட்சத்துக்கு அதிகமான கத்தோலிக்கர்


ஜூன்10,2009. தென் கொரியாவில் தற்சமயம் ஐம்பது இலட்சத்துக்கு அதிகமான கத்தோலிக்கர் உள்ளனர், இவ்வெண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையில் ஏறத்தாழ பத்து விழுக்காடாக இருக்கின்றது என்று கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு கூறுகிறது.

2008ம் ஆண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி, அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 2007ம் ஆண்டைவிட ஒரு இலட்சத்து முப்பதாயிரம் அதிகம் என்றும் அக்கணக்கெடுப்பு கூறுகிறது.

கடந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில், கத்தோலிக்கரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 2.7 விழுக்காடு வீதம் அதிகரித்துள்ள அதேவேளை, நாட்டின் மொத்த மக்கள் தொகை 0.8 விழுக்காடே அதிகரித்துள்ளது என்றும் அக்கணக்கெடுப்பு அறிவிக்கின்றது.

கொரிய பொதுநிலை விசுவாசி பீட்டர் யி சுங்-ஹன் என்பவர், சீனாவில் 1784ம் ஆண்டு திருமுழுக்குப் பெற்று கொரியா திரும்பியதோடு அந்நாட்டில் கத்தோலிக்கம் நுழைந்தது.

எனினும் ஜோசோன் ஆட்சி காலத்தில் 1801ம் ஆண்டில் கத்தோலிக்கர்கள் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகினர்.








All the contents on this site are copyrighted ©.