ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய கிறிஸ்தவ சபைகள் ஆழ்ந்த
கவலை
ஜூன்09,2009. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலையையும்
கண்டனத்தையும் இந்திய கிறிஸ்தவ சபைகள் வெளியிட்டுள்ளன.
கடந்த சிலவாரங்களில் ஏறத்தாழ
பத்து இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கண்டனத்தை வெளியிட்ட கிறிஸ்தவ
சபைகள், இவைகளை உடனடியாக நிறுத்த ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விண்ணப்பித்துள்ளன.
இந்திய
பிரிந்த கிறிஸ்தவ சபையின் பொதுச் செயலர் பாஸ்டர் எனோஸ் பிரதன் உரைக்கையில், ஆஸ்திரேலிய
கிறிஸ்தவ சபைகளைத் தொடர்பு கொண்டு இதில் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துமாறு கேட்கவுள்ளதாகத்
தெரிவித்தார்.
ஏற்கனவே இந்திய கத்தோலிக்கத் திருச்சபை இந்தியாவிலுள்ள ஆஸ்திரேலியத்
தூதரகத்திற்குத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.