தூய பிரான்சிஸ் அசிசியாரின் 119 ஆவது வழித்தோன்றல்.0506 .
ஜூன்மாதாம் 4 ஆம் தேதி பிரான்சிஸ் சபையின் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 152 பேர்
அசிசியின் வானதூதர்கள் தேவாலயத்தில் கூடியிருந்தனர். சபையின் புதிய தலைவராக ஜோஸ் ரொட்ரீகுவஸ்
கார்பாலோ தேர்வு செய்யப்பட்டுள்ளார் . தேர்வை வத்திக்கான் சார்பாக மேதகு கர்தினால் ஜோஸ்
சரைவா மார்ட்டின்ஸ் தலைமை ஏற்று தேர்வைக் கவனித்தார் . சபையின் 187 ஆவது பொது அமர்வு
மே 24 லிலிருந்து ஜூன் 20 வரை நடந்து வருகிறது .
புதிதாகப் பொறுப்பேற்றி்ருக்கும்
தந்தை கார்பாலோ ஸ்பெயின் நாட்டில் ஆகஸ்ட்மாதம் 11 , 1953 ல் பிறந்தவர் . இதற்கு முன்னர்
சபையில் 2003 ஆம் ஆண்டிலிருந்து மினிஸ்டர் ஜெனரல் என்ற பதவியில் இருந்திருக்கிறார் .
இறையியல் பட்டங்கள் பெற்றவர் . 15 ,000 உறுப்பினர்களைக்கொண்ட பிரான்சிஸ்கன் சபையை 6 ஆண்டுகளுக்கு
வழி நடத்துவார் .