முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான்பாலுக்கு முத்தி்ப்பேறுபட்டமளிப்பதில் காலதாமதம் ஏதும்
இல்லை என்கிறது வத்திக்கான் . முந்நாள் திருத்தந்தைக்கு முத்துப்பேறுபட்டமளிப்பதில் தடங்கல்
இருப்பதாக ஊடகங்கள் அறிவித்ததை வத்திக்கான் நிராகரித்துள்ளது . முந்நாள் திருத்தந்தை
பல காலமாக டாக்டர் வாண்டா போல்ட்டவுஸ்காவோடு கொண்டிருந்த கடிதத் தொடர்பு தடங்கலுக்குக்
காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன . வத்திக்கான் திருப்பீடத்தின் முந்நாள்
செய்தித் தொடர்பாளர் ஜோக்கின் நவாரோ வால்ஸ் முந்நாள் திருத்தந்தையின் முத்துப்பேறு பட்டம்
இன்னும் ஓராண்டில் நடைபெறலாம் எனத் தெரிவித்துள்ளார் . திருத்தந்தை ஜான் பாலின் முத்துப்பேறு
பட்டத்தோடு தொடர்புடைய மேதகு கர்தினால்கள் ஆஞ்சலோ சொதோனோவும் , லெயோனார்டோ சாந்திரியும்
திருப்பீடத்தின் முத்துப்பேறு மன்றத்தில் இதுநாள் வரை வாக்குமூலம் கொடுக்காததே காலதாமதத்துக்கு
முக்கியக் காரணம் என வத்திக்கான் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்கள் .