2009-06-05 17:14:50

குழந்தைகள் உரிமைகளைக் காக்க வேண்டுகிறார் திருத்தந்தை. 0506


ஜெனீவாவிலிருந்து இயங்கும் ஐநாடுகள் சபை குழந்தைகள் நலம் காக்க , குழந்தைகள் உரிமை காக்க இம்மாதம் 4 தேதியிலிருந்து குழந்தைகளின் பிரச்சனைகள் பற்றிய கண்காட்சியை அங்கு நடத்துகிறது . அதையொட்டி திருத்தந்தை வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் . வத்திக்கான் திருப்பீடச் செயலர் மேதகு கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே வழியாக அனுப்பியுள்ள செய்தியில் குழந்தைகளின் எதிர்கால நம்பிக்கையையும் , மாண்பையும் காக்க நாம் உறுதிகள் எடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் . குழந்தைகள் நலம் காக்கும் திட்டங்களின் 20 ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி குழந்தைகள் கண்காட்சியை அமைத்துள்ள ஐநாசபைக்கு அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெறத் தம்முடைய செபங்களைக் காணிக்கையாக்குவதாகவும் உலகம் முழுவதுமே குழந்தைகள் நலமும் உரிமையும் காக்குமாறு தாம் விழைவதாகவும் வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.