ஐ .நாவின் குழந்தைகள் மாண்பைக் காக்கும் புகைப்படக்கண்காட்சி.0406 .
ஐ . நாடுகள் சபையின் குழந்தைகள் மாண்பைக்காக்கும் புகைப்படக் கண்காட்சியின் திறப்பு விழாவில்
உரை வழங்கினார் பேராயர் சில்வானோ தோமாசி . ஜெனீவாவில் இயங்கும் ஐநாவுக்கான மன்றத்தின்
வத்திக்கான் திருப்பீடத்தின் நிரந்தர உறுப்பினர் பேராயர் தோமாசி . ஐநாவின் ஜெனீவா சபையில்
குழந்தைகளின் நம்பிக்கையும் மாண்பும் பற்றிய புகைப்படக்கண்காட்சி ஜூன் மாதம் 4 ஆம் தேதி
தொடங்கியது .
அங்கு உரை வழங்கிய பேராயர் சில்வானோ தோமாசி குழந்தைகளே
வருங்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் . மனித மாண்புக்குரிய உரிமைகள் அவர்களுக்கு
வழங்கப்படவேண்டும் எனப் பேராயர் தெரிவித்தார் . கிறிஸ்தவ கல்விக்கூடங்கள் வழியாகவும்
, தொண்டு நிறுவனங்கள் வழியாகவும் உலகெங்கும் பல கோடிக்குழந்தைகள் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்
. உணவுப்பற்றாக்குறை , மருத்துவ வசதிகள் , மருந்துகள் இல்லாமை , வறுமையின் கோரத்தன்மை
, வன்முறை , முகாம்களில் படுகின்ற துயரங்கள் மற்றும் கட்டாயமாக போர்ப்படையில் சேர்க்கப்படுதல்
போன்ற தீமைகள் குழந்தைகளைப்பாதிப்பதாகத் தெரிவித்தார் பேராயர் . 5 வயதுக்கும் குறைவான
குழந்தைகள் 90 லட்சம் பேர் 2007 ஆம் ஆண்டு இறந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
. ஆப்பிரிக்காவில் 8 லட்சம் குழந்தைகள் எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . குழந்தைகளுக்கு
புதிய ஆயிரமாவது ஆண்டின் திட்டங்கள் பலன் தரவேண்டும் எனக் கத்தோலிக்கத் திருச்சபை விரும்புவதாகத்
தெளிவுபடுத்தினார் பேராயர் சில்வானோ தோமாசி .