1896 – குலியெல்மோ மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப்
பெற்றார்.
1946 – இத்தாலிய குடியாட்சி பிறந்தது. இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக
மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னர் இரண்டாம்
உம்பெர்த்தோ நாட்டை விட்டு வெளியேறினார்.
1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின்
அரசியாக முடிசூட்டப்பட்ட விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
1979
– திருத்தந்தை 2ம் ஜான் பவுல் தனது தாயகமான போலந்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார்.
இதன் மூலம் ஒரு கம்யூனிச நாட்டிற்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயரை ஏற்றார்.
1535ல்
திருத்தந்தை பதினோராம் சிங்கராயரும், 1835 ல் திருத்தந்தை பத்தாம் பத்திநாதரும் பிறந்தனர்.