2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஜூலியன் மற்றும் கிரகோரியன் நாட்காட்டிகள் ஒன்றாக இணைவது,
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா கிழக்கிலும் மேற்கிலும் ஒரே நாளில் சிறப்பிக்கப்படுவதற்கு
நல்ல வாய்ப்பாக அமைகின்றது
மே30,2009. 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஜூலியன் மற்றும் கிரகோரியன் நாட்காட்டிகள்
ஒன்றாக இணைவதால், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா கிழக்கிலும் மேற்கிலும் ஒரே நாளில்
சிறப்பிக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று சர்வதேச கிறிஸ்தவ ஒன்றிப்பு
கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.
உக்ரேய்ன் நாட்டு லிவ் கத்தோலிக்கப் பல்கலைகழக்ததில்
நடைபெற்ற கருத்தரங்கில் பங்கு கொண்டோர் இவ்வாறு கூறினர்.
இந்த இரண்டு நாட்காட்டிகள்
ஒன்றாக இணைவதால் அனைத்து கிறிஸ்தவர்களும் 2012ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி கிறிஸ்துவின்
உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவர் என்றுரைத்த அவர்கள், இனிமேல் ஆண்டுதோறும் ஒரேநாளில்
எல்லாக் கிறிஸ்தவர்களும் இப்பெருவிழாவைக் கொண்டாட இது நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றனர்.
கிறிஸ்துவின்
உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பொதுவான தேதியைக் குறிக்கும் முயற்சி 325ம் வருடத்தில்
நீசே பொதுச் சங்கத்தில் தொடங்கப்பட்டது