வத்திக்கானுக்கான புதிய இந்திய அரசுத் தூதரின் வாழ்க்கைக் குறிப்பு .290509.
செல்வி சித்ரா நாராயணன் இந்திய அரசால் வத்திக்கான் திருப்பீடத்தின் புதிய அரசுத் தூதராக
நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் ஆகஸ்ட் 10 , 1952 ல் பிறந்துள்ளார். அரசியல் துறைப் பாடப்பிரிவில்
இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார் .
1978 லிருந்து அரசுப்பணிகளில் இருந்து
வருகிறார் .
1978- 80 வெளியுறவுத்துறை அமைச்சரக அதிகாரி .
1980-83 உரோமையில்
இந்திய அரசின் தூதரகத்தில் செயலர் .
1983-86 நைரோபியில் இந்திய அரசின் தூதரகத்தில்
செயலர்.
1986-91 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் துணைச் செயலர்.
1991-94
வாஷிங்டனில் இந்திய அரசின் தூதரகத்தில் செயலர் , ஆலோசகர் .
1995-2001 புது டெல்லியில்
அரசின் ஆய்வு அமைப்பில் இயக்குநர் .
2001-2008 ஸ்டாக்ஹோமில் இந்திய அரசுத்தூதர்
.
2005-2008 அங்காராவில் இந்திய அரசுத்தூதர் .
தற்போது சுவிட்சர்லாந்து
நாட்டின் பெர்னில் இந்திய அரசுத்தூதராக இருக்கிறார்.