இந்த வியாழன் நண்பகலில் இத்தாலிய ஆயர்கள் குழுவை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை 16
ஆம் பெனடிக்ட் .280509 .
இத்தாலியின் அனைத்து மறைமாவட்டங்களின் ஆயர்களும் தங்கள் மகிழ்ச்சியையும் கவலைகளையும்
பகிர்ந்து கொள்ள ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வந்திருப்பதற்குத் திருத்தந்தை நன்றி கூறினார்
. திருச்சபையில் காணும் ஒற்றுமையை வந்திருந்த ஆயர்களில் காண்பதாகத் தெரிவித்தார் . திருச்சபையையும்
இத்தாலிய ஆயர்களையும் இறுக்கமான உறவு பிணைப்பதாக மேலும் தெரிவித்தார் . இத்தாலியத் திருச்சபை
தமது இறைமக்களுக்கு இறைவாக்கையும் , அருள்சாதனங்களையும் வழங்கி திருச்சபையில் வளமான விசுவாச
வாழ்வுக்கு வழிவகுப்பதாகவும் அவர்கள் திருச்சபையில் பிரமாணிக்கமான உறுப்பினர்களாக வாழ
வழி வகுப்பதாகவும் திருத்தந்தை தம் பாராட்டை ஆயர்களுக்குத் தெரிவித்தார் . இதில் சிரமங்கள்
இல்லாமல் இல்லை எனக்கூறிய திருத்தந்தை பல்வேறு முறைகளில் இறைமக்கள் நற்செய்திப்பணியில்
அவர்களுடைய பொறுப்புக்களைச் சரிவரச் செய்வதற்கு தங்களைப் புதுப்பித்து வருவதாகவும் திருத்தந்தை
தெரிவித்தார் . கிறிஸ்துவின் முழுமையில் வளர்ச்சி பெறுவதற்கு எல்லோருக்கும் கடமையுள்ளது
எனத் தெரிவித்தார் . இறை அருளையும் ஆற்றவேண்டிய பணியையும் சரிவரப் புரிய குருக்களின்
ஆண்டு தொடங்கவுள்ளதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . இத்தாலிய மக்கள் திருச்சபையோடு இணைந்து
தேவையில் உள்ளோருக்குத் தமது பிறரன்பைக்காட்டுவதைப் பாராட்டினார் . பொருளாதார நெருக்கடியான
இவ்வேளையில் கூட்டுப் பொறுப்புணர்வுச் சேமிப்பைத் தொடங்கியுள்ளதைத் திருத்தந்தை பாராட்டினார்
. விரைவில் தூய ஆவியானவரின் பெருவிழாவைக் கொண்டாடவிருப்பதால் இத்தாலியத் திருச்சபையின்
பயணத்தையும் இங்கு வாழும் அனைவரையும் தூய ஆவியானவரின் பாதுகாப்பில் காணிக்கையாக்குவதாகத்
வாழ்த்துக்கூறி தம் ஆசியை ஆயர்களுக்குத் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .