2009-05-26 15:11:13

சீனாவில் மதசுதந்திரம் மதிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும், ஹாங்காங் திருச்சபை


மே26.2009. சீனாவில் மதசுதந்திரம் மதிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் சீனக் கத்தோலிக்கர் சித்ரவதைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என சீன அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது ஹாங்காங் நீதி மற்றும் அமைதி அவை.

கடந்த ஞாயிறன்று சீனாவுக்கான செப நாளாக அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி ஹாங்காங்கிலுள்ள சீன ஆட்சி அலுவலகத்தின்முன் கூடி செபித்த கத்தோலிக்கர், சீனாவில் மதசுதந்திரம் குறித்த புத்தகம் ஒன்றையும் வெளியிட்டனர்.

சீனாவில் மத அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதைத் தடுக்க இப்புத்தகம் உதவும் என்ற நம்பிக்கையும் ஹாங்காங் கத்தோலிக்கரால் வெளியிடப்பட்டது.

ஜெங்டிங் ஆயர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது, ஆயர்கள் சு ஜினியன், ஷி என்ஜியாங், குரு லு ஜென்சுன் ஆகியோர் காணாமற்போயுள்ளது போன்றவை குறித்தும் ஹாங்காங் கத்தோலிக்கர் சீன அரசுக்கானத் தங்கள் கடிதத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.