அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது.
உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.2 ஏனெனில், நீர் அவரிடம்
ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு
அதிகாரம் அளித்துள்ளீர்.3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்
அறிவதே நிலைவாழ்வு.4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து
முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர்
என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.6
நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை
வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர்.
அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே
வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே
நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன்
என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.9
அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே
வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும்
என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை.
அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்