பாகிஸ்தானில் மோதல்கள் காரணமாக வெளியேறியுள்ள ஏறத்தாழ இருபது இலட்சம் மக்களுக்கென நிதியுதவிக்கு
ஐ.நா.விண்ணப்பம்
மே23,2009. பாகிஸ்தானில் மோதல்கள் காரணமாக வெளியேறியுள்ள ஏறத்தாழ இருபது இலட்சம் மக்களுக்கென
ஐம்பது கோடி டாலர்கள் நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்
இம்மாதம்
இரண்டாம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் சண்டையினால் ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் அதன்
அண்டைப் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ள மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும்,
சர்வதேச சமுதாயம் அவர்களுடனான
ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்குமாறும் ஐ.நா. பொதுச்
செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார்.
தற்போது வெளியேறியுள்ள 17 இலட்சத்துக்கு மேற்பட்ட
மக்களுள் இரண்டு இலட்சம் பேர் முகாம்களிலும், எஞ்சியுள்ளவர்கள் நண்பர்களோடும் பிற சமூகத்தவரோடும்
பள்ளிகளிலும் குடும்பங்களிலும் வாழ்வதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான அவையின் இயக்குனர் தெரிவித்தார்.
.