அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது-அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்க
மாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை.
கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். ' நான்
உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப்
பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால்
வேண்டுவீர்கள். அப்போது ' உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன் ' என நான் சொல்லமாட்டேன்.
ஏனெனில் தந்தையே உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என் மீது அன்புகொண்டு, நான்
கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்.
நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.
'