2009-05-21 13:59:59

இலங்கை தமிழ்ச் சமுதாயத்தினர் அனைத்துத் துறைகளிலும் சரிநிகர் உரிமைகளைப் பெற வழிசெய்ய வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் கடமை, சென்னை மயிலைப் பேராயர்


மே21,2009. பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழ்ச் சமுதாயத்தினர் அனைத்துத் துறைகளிலும் சரிநிகர் உரிமைகளைப் பெற வழிசெய்ய வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் கடமையாகிறது என சென்னை மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளைக் கைவிட்டு மக்கள் நலனுக்காக உழைக்க ஒன்றிணைந்து வரவேண்டும் என்ற அழைப்பும் பேராயரால் முன்வைக்கப்பட்டது.

இலங்கையின் அண்மை மோதல்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இவ்வினப்படுகொலைகளுக்கும் போர்க்காலக் குற்றங்களுக்கும் காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் தமிழ்நாடு அரசு சிறுபான்மை அவைத்தலைவர் குரு வின்சென்ட் சின்னத்துரை.

போரில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் நிவாரணப் பணிகளில் சர்வதேச சமுதாயமும் இலங்கை அரசும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் விண்ணப்பித்தார்.








All the contents on this site are copyrighted ©.