சீனாவில் மறை பரப்பிய இயேசு சபைக் குருவை நினைவு கூருகிறார் திருத்தந்தை . 200509 .
இயேசு சபையின் அருள் தந்தை மத்தேயோ ரிச்சியின் மறைப்பணியைத் திருத்தந்தை பாராட்டினார்
. தந்தை மத்தேயு ரிச்சி சீனாவில் நற்செய்தியைப் பரப்பவும் , மேலைத் கலாச்சாரத்துக்கும்
கீழைக் கலாச்சாரத்துக்குமிடையே கலந்து உரையாடலை ஊக்குவித்தார் . மத்தேயோ ரிச்சி பிறந்த
இத்தாலியில் உள்ள மாசெராத்தா டொலெண்டீனோ மறைமாவட்ட ஆயர் கிளாடியோ ஜூலியோடோரிக்கு தம்
வாழ்த்துச் செய்தியை திருத்தந்தை அனுப்பியிருந்தார் . தந்தை மத்தேயோ ரிச்சி அங்கு 1522
ல் பிறந்தார் . தந்தை ரி்ச்சி 28 ஆண்டுகள் சீனாவில் பணியாற்றிய பிறகு மே 11 , 1610ல்
பெய்ஜிங்கில் காலமானார் . தந்தை ரிச்சியின் ஆழ்ந்த கலாச்சார மற்றும் கல்வி ஞானத்தையும்
திருத்தந்தை பாராட்டியுள்ளார் . மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கும் கீழை நாட்டுக் கலாச்சாரத்துக்குமிடையே
நல்ல கலந்து உரையாடலை உருவாக்கிய தந்தை ரிச்சி , சீனாவின் பெருமக்களிடையே கிறிஸ்துவத்தின்
விதையை நாட்டினார் . அவருடைய எடுத்துக்காட்டு சீனாவுக்கும் மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கும்
உறவை வலுப்படுத்த நல்ல மாதிரியாக இரு்பபதாகத் திருத்தந்தை தெரிவித்துள்ளார் .