2009-05-20 18:44:15

காரித்தாஸ் தலைவர் – இலங்கை- எதிர்காலத்துக்குத் திட்டமிடல் .2005 .


நல்ல எதிர்காலத்துக்கு இலங்கை திட்டமிடவேண்டும் என அகில உலகக் காரித்தாஸ் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது . இலங்கையில் அமைதி நிலவுவதாகக் கூறுவதற்கு முன்னர் பல செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது என அகில உலகக் காரித்தாஸ் நிறுவனம் கூறுகிறது . போரால் புலம் பெயர்ந்துள்ள மக்கள் வாழும் முகாம்களில் வாழ்க்கை நிலை தரமானதாக இருக்கவேண்டும் எனவும் , அவர்களுக்கு மீண்டும் தத்தமது இடங்களுக்குச் சென்று வாழும் நிலையை உருவாக்கவேண்டும் என்றும் , இலங்கையில் நீதியின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு வாழ்வை அமைத்துக் கொடுக்கவேண்டும் எனவும் இலங்கையின் காரித்தாஸ் நிறுவன இயக்குநர் தந்தை டேமியன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.