ஆசிய ஊடகவியல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் முதன்முறையாக கூட்டம்
மே16,2009. ஆசியாவிலுள்ள ஊடகவியல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் முதன்முறையாக கூட்டம்
நடத்தியுள்ளன.
தாய்லாந்தில் இச்சனிக்கிழமை நிறைவு பெற்ற இந்த ஐந்து நாட்கள் கூட்டத்தில்,
ஆசியக் கண்டத்திலுள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்களுக்கு ஊடகவியலில் பயிற்சி
கொடுப்பது மற்றும் இந்தப் பயிற்சியில் அனுபவங்கள் பற்றிப் பேசப்பட்டது.
ஆசிய
ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், இந்தியாவிலிருந்து
11 பேர், இலங்கையிலிருந்து இருவர், பிலிப்பைனசிலிருந்து 23 பேர் என 66 பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.