2009-05-15 12:11:36

ஐ.நாசபைத் தூதுவர் இலங்கையில் அமைதிப்பேச்சு 150509 .


போர் காரணமாக தமிழ் மக்கள் உயிருக்குப் பேராபத்து வந்துள்ள நிலைமையில் போரை நிறுத்துமாறு ஐநா செயலர் பாங்கி மூனின் அலுவலர்களில் முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் இலங்கை அரசோடு கலந்து பேச அங்கு விரைந்திருக்கிறார் .



அரசு போரை நிறுத்த மறுத்து வருகிறது . செஞ்சிலுவைச் சங்கம் அங்கு மக்கள் படும் துயரத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத பேராபத்து எனக் கூறியுள்ளது . திரு விஜய் நம்பியார் ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளார் . போர் நடக்கும் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்கள் . 2 இலட்சம் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து அரசு முகாம்களில் பெரும் கூட்டமாகத் தவித்துக்கொண்டிருப்பதாக பிபிசி தெரிவிக்கிறது . உடனடியாக மக்களைக் காப்பாற்றாவிட்டால் அங்கு பேரழிவு உண்டாகும் என செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.