ஈராக்கின் கிர்க்குக் நகரில் கிறிஸ்தவ ஆசிரியர் கடத்தப்பட்டுள்ளார் . பணத்துக்காக பிணைக்கைதியாக
அவர் கடத்தப்பட்டுள்ளார் . கடத்தல்காரர்கள் அவரை விடுதலை செய்வதற்கு மிகப்பெரிய தொகையைத்
தருமாறு நிபந்தனை விதித்துள்ளார்கள் . அவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால்
பிணைத் தொகையைக் கட்டமுடியாது துயரத்தில் உள்ளார்கள் . கிர்க்குக் நகரிலிருந்து 30 கிமீட்டர்
தொலைவில் உள்ள ருவைதா கிராமத் தொடக்கப்பள்ளியிலிருந்து 32 வயதுடைய நமீர் நதீம் என்பவரைக்
கடத்திச் சென்றுள்ளனர் . பணத்துக்காக ஆட்கடத்துவது வழக்கமாக அங்கு நடந்துவருகிறது . கடத்தப்பட்ட
ஆசிரியர் நமீர் விடுதலைக்காக கிர்க்குக் நகரின் கல்தேயப் பேராயர் லூயிஸ் சாக்கோ அப்பகுதியில்
உள்ள இஸ்லாமியத் தலைவர்களிடம் பரிந்து பேசிவருகிறார் . விடுதலை பெற வாய்ப்பிருப்பதாகப்
பேராயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .