2009-05-14 18:35:39

புனித பாத்திமா அன்னை நம் பிரச்சனைக்குத் தீர்வு தருவதாகக் கூறுகிறார் கர்தினால் .140509 .


போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா என்ற இடத்தில் அன்னை மேரிமாதா இரு சிறுமியருக்கும் ஒரு சிறுவனுக்கும் 1917 , மே 13 தேதியில் காட்சியாகத் தோன்றினார் . பாத்திமா அன்னை அங்கு காட்சி கொடுத்ததன் 92 ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . அங்கு நடந்த சிறப்புத் திருப்பலியின்போது காரித்தாஸ் தொண்டு நிறுவனத்தின் அகில உலகத் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா பாத்திமா மாதாவின் சிறப்புப் பற்றி மறையுரையில் கூறினார் . நாம் வாழும் உலகம் கடவுள் பற்றை மறந்து , ஒழுக்க நெறி கெட்டு , மனிதாபிமானம் இல்லாது நல்ல மதிப்பீடுகளை இழந்ததாக இருக்கிறது . நாம் இன்று உலகில் காணும் பொருளாதார நெருக்கடி அதன் ஓர் அடையாளம் என்றார் கர்தினால் மாராடீகா . அன்னை மரியாவின் எடுத்துக்காட்டால் கிறிஸ்தவ குழுமங்கள் இயேசுவை இன்னும் அறியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் கூறினார் . நம் சுயநலத்துக்கு அன்பே நல்ல மருந்து என கர்தினால் மாராடீகா தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.