பர்மாவின் ஆங் சான் சூ விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். 140509 .
பர்மாவில் இராணுவ ஆட்சியை நீக்கிக் குடியாட்சியைக் கொண்டு வருமாறு கோரிவரும் ஆங் சான்
சூ சிறை வைக்கப்பட்டுள்ளார் . ஆங் சான் சூ அமைதிக்காக நோபல் பரிசு வென்றவர் . அவர் புரட்சி
செய்வதாகக் கூறி 12 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் . தற்போது அவர் வீட்டுக்காவல்
சட்டத்தை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இராணுவ ஆட்சியாளரால் கைது செய்யப்பட்டுள்ளார்
. இம்மாதம் 18 ஆம் தேதி அவர் விசாரணைக்காக நீதி மன்றம் கொண்டு செல்லப்படுவார் . ஓர் அமெரிக்கச்
செய்தித் தொடர்பாளர் ஆங் சான் சூவின் அழைப்பின்றியே அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்
. அது தவறு என இராணுவ ஆட்சியாளர்கள் அவர்மீது பழி சுமத்தியுள்ளனர் .