2009-05-14 18:15:21

இலங்கையின் அருள் சகோதரிகள் தமிழ் மக்களுக்கு உதவி. 140509.


30 கத்தோலிக்க அருள் சகோதரிகள் கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு இம்மாதம் 12 ஆம் தேதி சென்று தமிழ் மக்களுக்கு உதவி வருகின்றனர் . இலங்கையின் காரித்தாஸ் தேசிய இயக்குநர் டேமியன் பெர்ணான்டோவும் , தந்தை ஜார்ஜ் சிகாமணியும் தமிழர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார்கள் . அரசு அனுமதியோடு சகோதரிகள் புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு 3 மாதங்களுக்கு வன்னிப்பகுதியில் பணி புரிய உள்ளார்கள் . முக்கியமாக குழந்தைகளுக்கும் , மற்றும் மருத்துவ மனைகளிலும் பணிபுரிய உள்ளனர் . வன்னி எல்லையில் 4 முகாம்கள் உள்ளன . தற்போது அங்கு 2 இலட்சம் பேர் தங்கியுள்ளனர் . இலங்கையின் வடக்கில் தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு அரசு உதவி கோரியதற்கு கத்தோலிக்கத் திருச்சபை சகோதரிகளை அங்கு அனுப்பியுள்ளது . மே மாதம் 11 ஆம் தேதி கொழும்பின் பேராயர் மேதகு ஆஸ்வால்டு கோமஸ் தலைமையில் கத்தோலிக்க ஆயர்கள் இராஜ பக்சேயைச் சந்தித்து தமிழ் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர் .







All the contents on this site are copyrighted ©.