பெத்லகேமில் இயேசு பிறந்த குடில் வளாகத்தில் திருத்தந்தையின் திருப்பலி மறையுரை .130509
.
இயேசு பிறந்த இந்த இடத்திற்கு நான் வருகைதர அருள்புரிந்த எல்லாம் வல்ல கடவுளுக்கும் ,
பாலஸ்தீனப் பகுதியில் வாழும் சகோதர , சகோதரிகள் உங்கள் அருகே இருக்கும் வாய்ப்பிற்கும்
நன்றி கூறுகிறேன் .
பாசத்தோடு என்னை வரவேற்ற பிதாப்பிதா போட்வாலுக்கும் , சகோதர
ஆயர்கள் , குருக்கள் , இறைமக்களுக்கும் வாழ்த்துக்கூறுகிறேன் என்றார். போரால் துயர் உறும்
மக்களுக்கும் , குடும்ப உறுப்பினர்களை இழந்து வேதனைப்படுவோர்க்கும் நீங்கள் படும் துன்பங்களுக்காக
பெரிதும் வருந்துகிறேன் . விரைவி்ல் மறுவாழ்வுப் பணி தொடங்கும் எனவும் உங்களுக்கு
எதிரான தடைகள் யாவும் நீங்கும் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் .
அஞ்சாதீர்கள்
. இதோ நான் உங்களுக்கு மகிழ்ச்சிமிக்க நற்செய்தி ஒன்றை அறிவிக்கிறேன் . இன்று தாவீதின்
நகரில் உங்களுக்கு ஓர் மீட்பர் பிறந்துள்ளார் . வானிலிருந்து வந்த குரல் இன்றும் இங்கு
ஒலித்துக் கொண்டிருக்கிறது . அந்நற்செய்தி எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படுகிறது . மீட்பர்
உங்களுக்காகவும் எனக்காகவும் பிறந்துள்ளார் . கடவுள் திட்டத்தில் பெத்லகேம் மங்காப் புகழ்
பெற்று நிற்கிறது . இங்குதான் பாவத்தையும் சாவையும் அழிப்பதற்காக மீட்பர் பிறந்தார் .
நம்பிக்கை இழந்த உலகுக்கு புதிய நிறைவான வாழ்வைத் தர இயேசு மீட்பர் பிறந்தார் .
பெத்லகேம்
என்பது மாபெரும் மறுபிறப்பின் நற்செய்தியை , புதுப்பித்தலை , ஒளியை , விடுதலையை உலகெங்கும்
வழங்குகிறது . ஆனால் இன்று இங்கு அது இன்னும் கானல் நீராக இருக்கிறது .
பிறப்பிலிருந்தே
இயேசுவின் நாமம் எதிர்க்கப்படும் பெயராக இருந்துவந்ததை நாம் காண்கிறோம் . இன்றும் அவ்வாறே
உள்ளது . எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும் மீ்ட்பரின் நற்செய்தி முழங்கிக் கொண்டே இருக்கிறது
. இங்கு நாம் நினைக்கமுடியாத அளவில் கடவுள் தம்முடைய உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளார்
. அவருடைய திருமகனின் பிறப்பிலே அன்பின் அரசாட்சியை நமக்கு அளித்துள்ளார் . மனித உடலில்
தோன்றிய மீட்பர் இயேசு பாவத்தின்மீதும் சாவின்மீதும் வெற்றி கொண்டார் . இதுதான் பெத்லகெமின்
நற்சய்தி . மனிதர்களை வலுக்குறையச் செய்யும் வெறுப்பு , சுயநலம் , அச்சம் , பகைமை மீது
வெற்றி கண்டார் இயேசு .
வரலாற்றாலும் காலத்தின் போக்காலும் அலைக்கழிக்கப்பட்ட
பழைய இயேசு பிறந்த இடத்தில் அமைந்த திருக்கோவில் விசுவாசத்திற்குச் சான்றாக , உலகின்
மீது வெற்றி கொண்டதற்குச் சான்றாக நிற்கிறது . மனித மனங்களை மாற்ற இறையருள் துணைபுரிய
மன்றாடுவோம் . இவ்வாறு இடையர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி நமக்கும் , மனித குலம் அனைத்திற்கும்
தொடர்ந்து விண்ணுலகில் கடவுளுக்கு மகிமையும் , மண்ணுலகில் அவர் அன்பு செய்வோருக்கு சமாதானமும்
உண்டாகுக என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் , ஆமென் என திருத்தந்தை மறையுரையை நிறைவு
செய்தார் .