திங்கள் காலை 10.45 மணிக்கு இந்திய நேரம் 12.15 மணிக்குத் திருத்தந்தை எருசலேத்தின் யூத
குலத் தலைவர்களைச் சந்தித்தார் . முக்கிய ராபி அஷ்கெனாசியும் , செபார்தீத்தாவும் திருத்தந்தையை
வாழ்த்தி வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புனித பூமியின் காவலர்களாக இருந்து
வரும் பிரான்சிஸ்கன் சபையினரின் பிரையர்ஸ் மைனர் துறவு மடத்துக்குச் சென்றார் . இவர்கள்
1271 லிருந்து புனித பூமியினைப் பாதுகாத்து வருகிறார்கள் .
அங்கிருந்து
இயேசுவும் சீடர்களும் கிறிஸ்து பாடுபடுவதற்கு முந்திய நாள் வியாழன்று இரவு உணவு உண்ட
செனாகிலின் ஹேச்சல் ஷ்லோமோ என்ற புனித இடத்துக்கு அங்கு உள்ளூர் நேரம் காலை 11.50 மணிக்குத்
திருத்தந்தை சென்றார் . அங்கு புனித பூமியில் உள்ள குருக்களோடு நண்பகல் செபத்தைச் செபித்தார்
.
அங்கிருந்து விடை பெற்றுக்கொண்ட திருத்தந்தை அருகில் உள்ள லத்தீன் ரீதி பிதாப்பிதாவைச்
சந்திக்கச் சென்றார் .