2009-05-12 19:04:03

திருத்தந்தையின் மற்ற விஜயங்கள் .120509


திங்கள் காலை 10.45 மணிக்கு இந்திய நேரம் 12.15 மணிக்குத் திருத்தந்தை எருசலேத்தின் யூத குலத் தலைவர்களைச் சந்தித்தார் . முக்கிய ராபி அஷ்கெனாசியும் , செபார்தீத்தாவும் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புனித பூமியின் காவலர்களாக இருந்து வரும் பிரான்சிஸ்கன் சபையினரின் பிரையர்ஸ் மைனர் துறவு மடத்துக்குச் சென்றார் . இவர்கள் 1271 லிருந்து புனித பூமியினைப் பாதுகாத்து வருகிறார்கள் .



அங்கிருந்து இயேசுவும் சீடர்களும் கிறிஸ்து பாடுபடுவதற்கு முந்திய நாள் வியாழன்று இரவு உணவு உண்ட செனாகிலின் ஹேச்சல் ஷ்லோமோ என்ற புனித இடத்துக்கு அங்கு உள்ளூர் நேரம் காலை 11.50 மணிக்குத் திருத்தந்தை சென்றார் . அங்கு புனித பூமியில் உள்ள குருக்களோடு நண்பகல் செபத்தைச் செபித்தார் .

அங்கிருந்து விடை பெற்றுக்கொண்ட திருத்தந்தை அருகில் உள்ள லத்தீன் ரீதி பிதாப்பிதாவைச் சந்திக்கச் சென்றார் .








All the contents on this site are copyrighted ©.