காண்டுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருட்தந்தை ஆரோக்ய செபஸ்தியான் துரை ராஜ்
மே11,2009. இந்தியாவின் காண்டுவா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இறைவார்த்தை சபையைச் சேர்ந்த
அருட்தந்தை ஆரோக்ய செபஸ்தியான் துரைராஜ் அவர்களை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்.
1957ம் ஆண்டு மதுரை உயர் மறைமாவட்டத்தின் திருநகரில் பிறந்த புதிய
ஆயர் ஆரோக்ய செபஸ்தியான் துரைராஜ், இறைவார்த்தை துறவு சபையில் 1985ம் ஆண்டு குருவாகத்
திருநிலைபடுத்தப்பட்டார்.
இறைவார்த்தை சபையில் பொருளர், ஆன்மீகத்தந்தை, குருமட
அதிபர் எனப் பல்வேறு பதவிகள் வகித்துள்ள இவர், இந்நாள்வரை இறைவார்த்தை துறவு சபையின்
மத்திய இந்திய மாகாண அதிபராகச் செயல்பட்டு வந்துள்ளார்.
முன்னாள் ஆயர் லியோ கொர்னேலியோ
போபால் பேராயராக பதவி உயர்வு பெற்று சென்றதிலிருந்து காலியாக இருந்த காண்டுவா மறைமாவட்டத்திற்கு
தமிழகத்தைச் சேர்ந்த இறைவார்த்தை சபை குரு செபஸ்தியான் துரைராஜ் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்