கத்தோலிக்க ஆலயங்களுக்குத் திருத்தந்தை அடிக்கல் நாட்டல். 110509 .
ஜோர்டானின் யோர்தான் நதிக்கரையில் திருத்தந்தை இரண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் ஆலயங்களுக்கு
அடிக்கல் நாட்டினார் . அதுபோது அவர் நிகழ்த்திய உரையில் , யோர்தான் நதி பல்வேறு முக்கியத்துவம்
வாய்ந்தது எனத் திருத்தந்தை கூறினார் . திஸ்பைட் நகரைச் சேர்ந்த இறைவாக்கினர் எலியாஸ்
அந்தப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் , அதற்கு அருகில்தான் ஜெரிக்கோ நகரை நோக்கிய வண்ணம்
இறைவாக்கினர் எலியாஸ் வானகம் சென்றதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் .
அந்த
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஜோர்டான் நாட்டின் மன்னராலும் மகாராணியாராலும்
வரவேற்கப்படுவதற்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .
அங்கு
நடப்பட்ட அஸ்திவாரக்கல் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை
. திருச்சபை கிறிஸ்தவில் நிலையாக உள்ளது . கிறிஸ்துவால் காக்கப்படுகிறது . அவரிடமிருந்து
பிரிக்கப்படமுடியாது . கிறிஸ்துவே எல்லாக் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கும் , குழுக்களுக்கும்
ஒரே அடித்தளமாக இருக்கிறார் , வாழும் அடித்தளமாக , ஒதுக்கப்பட்ட அடிக்கல்லாக ஆனால் கடவுள்
பார்வையில் மிகவும் பிரியமான மூலைக்கல்லாக இருக்கிறார் கிறிஸ்து என மேலும் கூறினார் திருத்தந்தை
.
தமது உரையின் முடிவில் இரண்டு புனிதமான கோயில்களின் அடிக்கற்களையும்
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அர்ச்சித்தார் . ஆண்டவர் இவற்றைப் பாதுகாத்து , உறுதிப்படுத்தி
, கடவுளை இங்குவந்து வணங்கும் மக்களைப் பெருகச்செய்வாராக . உங்கள் அனைவரையும் தம் சமாதானத்தால்
நிரப்புவாராக , ஆமென் எனச் செபித்து திருத்தந்தை அந்த ஆலய அடிக்கற்களைப் புனிதப்படுத்தினார்.