உலக இளைஞர் மாநாட்டுக்கான சுருக்கு வார்த்தைப் போட்டி .080509 .
மாட்ரிட் நகரம் அகில உலக இளைஞர் மாநாட்டுக்கான சுருக்கு வார்த்தையில் சுலோகத்தை எழுதி
அனுப்பப் போட்டி அறிவித்துள்ளது . ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மாநகர உயர் மறைமாவட்டம்
வரும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 லிருந்து 21 தேதிகளில் இம்மாநாட்டை நடத்துகிறது
. மிகவும் அழகான சுலோகத்தை எதிர்பார்க்கும் மாநாட்டுக்குழு 15 ,000 யூரோப் பணத்தைப்
பரிசாகத் தரவுள்ளது . இந்தச் சுலோகம் இணையதளத்திலும் , பரிசுப்பொருட்களிலும் , மற்றும்
மாநாட்டோடு தொடர்புடைய அனைத்திலும் விளம்பரமாக வைக்கப்பட உள்ளது . கத்தோலிக்க இளைஞர்களுக்கான
இம்மாநாடு அகில உலகக் நிகழ்ச்சியாகும் . திருத்தந்தை இதை ஊக்குவிக்கிறார் . எல்லா மதத்தைச்
சேர்ந்த இளைஞர்களும் இதில் பங்கேற்க அழைக்கப்படுவதாக மாட்ரிட் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது
.