திருத்தந்தையின் திருப்பயணம் பற்றி எருசலேம் பிதாப்பிதா .070509 .
திருத்தந்தையின் திருப்பயணம் பற்றிக் கவலை தெரிவிக்கிறார் எருசலேத்தின் பிதாப்பிதா .
இஸ்ராயேலின் செய்தித்தாள் ஹாரெட்சுக்குச் செய்தி வெளியிட்டார் பேராயர் போட் ட்வாய் .
முஸ்லிம்களுக்கு திருத்தந்தை ஏதாவது சொன்னால் எனக்குத் தொல்லை வரும் . யூதர்களுக்கு ஏதாவது
திருத்தந்தை சொன்னாலும் எனக்குத் தொல்லை வரும் . திருத்தந்தையின் பயணமுடிவில் அவர் உரோமைக்குச்
சென்றுவிடுவார் . மொத்தத்தில் இஸ்ராயேல் அரசு கிறிஸ்தவத் தலைவர்களிடையே காட்டும் நம்பிக்கையில்லாமை
பற்றி வருத்தம் தெரிவித்தார் பேராயர் . இஸ்ராயேல் அரசு கிறிஸ்தவர்களை நம்பிச் செயல்பட்டால்
நன்மை பெறமுடியும் எனத் தெரிவித்தார் பேராயர் . திருத்தந்தையின் வருகையும் சிறந்த பயன்தரமுடியும்
என்றார் . திருத்தந்தையின் வருகைக்கு முன்னர் இஸ்ராயேல் அரசு திருச்சபைக்குச் சொந்தமான
பகுதிகளை அவர்களுக்கு உரிய முறையில் கொடுத்திருக்கவேண்டும் என்றும் , திருத்தந்தைக்குச்
சிறப்புச் செய்யும் விதத்தில் பாரம்பரியச் சொத்துக்களை இஸ்ராயேல் அரசு இப்போது தரவில்லையென்றால்
பின்னர் எப்போது தரப்போகிறார்கள் எனக் கவலை வெளியிட்டார் .