இலங்கைத் திருச்சபை போரால் அவதியுறும் மக்களுக்கு உதவி.070509 .
இலங்கையின் திருச்சபை போரால் அவதியுறும் மக்களுக்கு உதவிவருகிறது . ஜாப்னா தீவில் 2
லட்சம் பேர் அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். மாயெம் பகுதியில் பல குடும்ப
உறுப்பினர்கள் பிரிய நேர்ந்துள்ளது . குடும்பத்தில் தந்தை , தாய் , பிள்ளைகள் பிரிந்திருப்பதால்
எவர் எவர் உயிரோடு இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாத நிலையில் உள்ளனர் . இன்னும் 50
ஆயிரம் பேர் போராளிகளின் பகுதியில் சிக்கியுள்ளனர் . இலங்கை அரசு மேலை நாடுகள் எவ்வளவோ
வற்புறுத்தியும் போரை நிறுத்த மறுத்து வருகிறார்கள் . பிரிந்த குடும்ப உறுப்பினர்கள்
ஒன்றாக இணைவதற்கு அருள்சகோதரிகள் உதவி வருவதாக யூகான் செய்தி தெரிவிக்கிறது .