2009-05-07 18:08:20

இலங்கை அரசு தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விருப்பம் .070509.


இலங்கையின் தலைவர் ராஜபக்சா அவருக்கு விருப்பமான தமிழ் குழு ஒன்றை அமைத்துக்கொண்டு தமிழர்களின் தேவைகள் என்ன எனக் கேட்டு ஆவன செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் . சிறுபான்மையினரின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் . இதுபற்றிக்கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கருணாரத்னே இது கோமாளித்தனமான செயல் எனக்கூறியுள்ளார் . உண்மையாகவே உதவிசெய்யவிரும்பினால் தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களோடு கலந்து பேசவேண்டுமேயொழிய , தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து அதற்காக செயல்பட்டவர்களை இரக்கமின்றி நசுக்கும் அரசு இப்போது தமக்குச் சாதமானவர்களை வைத்து ஆதாயம் தேடவிழைவது மக்களை தந்திரமாக ஏமாற்றும் திட்டம் என கருணாரத்னே ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.