2009-05-02 14:30:29

32 சுவிஸ் கார்ட்ஸ் புதிதாக மே 6ம் தேதி பணிப் பிரமாணம் எடுக்கவுள்ளனர்


மே02,2009. சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களாக 32 பேர் புதிதாக இம்மாதம் மே 6ம் தேதி பணிப்பிரமாணம் எடுக்கவுள்ளனர்.

1527ம் ஆண்டில் உரோமை சூறையாடப்பட்ட போது திருத்தந்தையைப் பாதுகாப்பதற்காக 147 சுவிஸ் கார்ட்ஸ் உயிரிழந்தன் நினைவாக ஆண்டு தோறும் மே 6ம் தேதி புதிய மெய்க்காப்பாளர்கள் பணியேற்கும் நிகழ்வு வத்திக்கானில் நடைபெறுகின்றது.

மே 6ம் தேதி திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருப்பலி நிகழ்த்துவார். மாலை 5 மணிக்கு அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள சான் தமாசோ வளாகத்தில் பணிப்பிரமாணம் நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.