2009-04-30 17:49:23

மெக்சிக்கோவில் தூய குவாடலூப் மாதாவிடம் நவநாள் செபம்.300409.


மெக்சிக்கோ மாநகரைத்தாக்கியுள்ள பன்றி்க்காய்ச்சலைத் தடுக்க மெக்சிக்கோ நாட்டின் பாதுகாவலி குவாடலூப் மாதாவின் பரிந்துரையை விழையுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார் மெக்சிக்கோ மாநகர் பேராயர் கர்தினால் நார்பெர்ட்டோ ரிவேரா . மெக்சிக்கோவில் பரவி வரும் இந்த விஷக்காய்ச்சலால் 100 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் . குவாடலூப் மாதாவிடம் 9 நாட்களுக்கு நவநாள் செபம் செய்யுமாறும் , முன்னர் கொள்ளை நோய்கள் தாக்கியபோது அன்னைமாதாவின் பரிந்துரையால் நாடு பிழைத்தது எனவும் கர்தினால் ரிவேரா கூறியுள்ளார் . நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசின் உடல் நலப் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது . நோயைத் தடுப்பதற்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றுமாறும் மெக்சிக்கோவின் ஆயர்கள்குழு மக்களைக் கேட்டுள்ளது . இஸ்பானிய மொழிபேசும் அந்நாட்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.