2009-04-28 15:00:51

முறை சாராத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டம்


ஏப்.28,2009. முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கென மே மாதம் முதல் தேதி சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றைத் துவக்கவும் அவர்களுக்கு உதவ இணையதளம் பக்கம் ஒன்றைத் துவக்கவும் இந்திய ஆயர் பேரவை திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டின் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இத்திட்டங்கள் புதுடெல்லியின்

இந்திய ஆயர் பேரவை மையத்தில் அதன் தொழிலாளர் அவையின் தலைவர் ஆயர் ஜோசுவா மார் இக்னாத்தியோசால் தொடங்கி வைக்கப்படும்.

முறை சாராத் தொழிலாளர்களுக்கு உதவும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் தேசிய ஆயுட்காப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றது இந்திய தலத்திருச்சபை.

இவ்வெள்ளியன்று இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது இந்தியா முழுவதிலுமிருந்து ஆயர் பேரவையின் தொழிற் அமைப்புகளின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.