2009-04-28 15:03:04

இராக்கில் தலத்திருச்சபை தொடர்ந்து பணியாற்றும், இராக் பேராயர் லூயிஸ் சாக்கோ


ஏப்.28,2009. இராக்கில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கின்ற போதிலும் தலத்திருச்சபை அங்கிருந்து வெளியேறாது என்று இராக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.

இராக்கிலிருந்து கிறிஸ்தவர்களை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்ற நோக்குடன் சில தீவிரவாதக் குழுக்களால் நடத்தபப்டும் இக்கொலைகள் கண்டு தலத்திருச்சபை கோழையாகிவிடவில்லை என்றார் அவர்.

ஞாயிறு இரவு கிர்குக்கில் மூன்று கிறிஸ்தவர்கள் அவர்களின் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டது குறித்த உரைத்த பேராயர் சாக்கோ, இவர்களின் இரத்தம் ஒருநாள் இராக்கில் அமைதியையும் நிலையான தன்மையையும் கொணரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலும் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கானச் சாட்சியாகத் தலத்திருச்சபை இராக்கிலேயே தொடர்ந்து வாழும் எனவும் கூறினார் கிர்குக் பேராயர்.

 








All the contents on this site are copyrighted ©.