2009-04-25 15:49:53

மலேரியா நோய் சார்ந்த இறப்புக்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


ஏப்.25,2009. 2010ம் ஆண்டுக்குள் மலேரியா நோய் சார்ந்த இறப்புக்களைத் தடுப்பதற்கு நாடுகள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

ஏப்ரல்25, இன்று உலக முதல் மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வழங்கிய மூன், மலேரியாவால் தாக்கப்படும் அனைவருக்கும், குறிப்பாக ஆப்ரிக்காவில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் சிறாருக்கும் கொசுவலைகளும் மருந்துகளும் விநியோகிக்கப்படும் என்றார்.

மேலும் 50 கோடிப் பேருக்கான கொசுவலைகளுக்கும் மலேரியாவுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவமனைகள், இன்னும் நலவாழ்வுப் பணியாளருக்குப் பயிற்சி போன்றவைகளுக்கும் விண்ணப்பித்துள்ளார் அவர்.

மலேரியாவினால் ஆண்டுதோறும் ஏற்படும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட இறப்புகளில் 90 விழுக்காடு ஆப்ரிக்காவில் இடம் பெறுகின்றது







All the contents on this site are copyrighted ©.