2009-04-25 15:45:40

புனித பவுல் ஆண்டை பல்வேறு இடங்களில் நிறைவு செய்வதற்குத் தமது சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்துள்ளார் திருத்தந்தை


ஏப்.25,2009. திருத்தூதர் புனித பவுல் ஜூபிலி ஆண்டை, அப்புனிதர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் நிறைவு செய்வதற்குத் தமது சிறப்புப் பிரதிநிதிகளை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வருகிற ஜூன் 29ம் தேதி நிறைவடையும் புனித பவுல் ஆண்டை புனித பூமியில் சிறப்பிக்க திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் வால்டர் காஸ்பரையும்,

மால்ட்டாவிற்குத் திருப்பீட குடும்ப அவைத் தலைவர் கர்தினால் என்னியோ அந்தோனெல்லியையும்,

சைப்ரசிற்கு திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோவையும்,

துருக்கிக்கு திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரானையும்,

கிரேக்கத்திற்கு திருப்பீட விசுவாசபரப்பு பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் யோசேப் தொம்கோவையும்,

சிரியாவுக்கு ஸ்பெயினின் மத்ரித் பேராயர் அந்தோணியோ மரிய ரோக்கோ வரெலாவையும்,

லெபனனுக்கு பாரிஸ் பேராயர் கர்தினால் ஆந்த்தெ வாங்க் த்ருவாவையும்

திருத்தந்தை நியமித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.