2009-04-25 15:46:38

பிலிப்பைன்சில் செப ஆண்டு


ஏப்.25,2009. பிலிப்பைன்சில் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதற்காகச் செபிப்பதற்கு விசுவாசிகளைத் தூண்டும் நோக்கத்தில் செப ஆண்டை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

அமைதியைக் கட்டி எழுப்பவும் சமூக மாற்றத்தில் பொதுநிலை விசுவாசிகளின் பங்கேற்பை ஊக்குவிக்கவுமென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், 2010ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களுக்கு மக்கள் ஆன்மீக ரீதியில் தங்களைத் தயாரிக்கக் கேட்டுள்ளனர்.

புனித பவுல் ஆண்டையடுத்து, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2010ம் ஆண்டு ஜூன் வரை செப ஆண்டாக அறிவித்து அவ்வாண்டில் ஒவ்வொரு ஞாயிறும் நாட்டின் வருங்காலத்திற்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கத்தோலிக்கரை வலியுறுத்தியுள்ளனர் பிலிப்பைன்ஸ் ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.