இம்மாதம் 23 ஆம் தேதி திருப்பீடத்தின் விவிலியக் குழு திருத்தந்தையைச் சந்தித்தது . விவிலியத்தில்
இறைத்தூண்டலும் , உண்மையும் என்பது பற்றி அண்மையி்ல் கருத்தரங்கு நடந்து முடிந்தது .
அதில் கலந்து கொண்டவர்களை வரவேற்றுப் பேசிய திருத்தந்தை விவிலியத்தின் உட்பொருளை சரியாக
உய்த்துணர மூன்று அடிப்படைத் தத்துவங்களைத் தெரிவித்தார் . இதனை வத்திக்கானின் 2 வது
பொதுச்சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது . விவிலியத்தின் ஒருமைத்தன்மை , விவிலியம் பற்றிய
திருச்சபையின் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் இறைத்திட்டத்திலும் திருவெளிப்பாட்டிலும்
நம் இறை விசுவாசத்தின் பல்வேறு நம்பி்க்கைகளின் ஒருங்கிணைந்த தன்மை ஆகியவற்றைக் கருத்தில்
கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார் திருத்தந்தை. விவிலிய வல்லுநர்கள் தனிப்பட்ட முறையில்
விவிலியத்தை ஆராய்வதில் அல்ல , திருச்சபை கொண்டுள்ள விசுவாசத்தோடு விவிலியத்தைக் கண்நோக்கவேண்டும்
எனத் தெரிவித்தார் திருத்தந்தை16 ஆம் பெனடிக்ட் .