அரபு நாடுகளுடன் திருப்பீடம் புதிய ஒப்பந்தம் . 240409 .
அரபு நாடுகளுடன் வத்திக்கான் திருப்பீடம் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது .
புதிய ஒப்பந்தப்படி அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு வழி பிறந்துள்ளதாக வத்திக்கான் கருதுகிறது
. சமய நல்லுறவுக் கலந்துரையாடலுக்கும் , மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தனிச் சிறப்பு
வாய்ந்த நல்ல தொடர்புக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது . வெளி நாடுகளோடு
வத்திக்கானின் தொடர்பு அதிகாரி பேராயர் தோமினிக் மாம்பெர்ட்டியும் , அரபு நாடுகளுக்கான
செயலர் அமர் மூசாவும் இந்த ஒப்பந்தத்தில் இம்மாதம் 23 ஆம் தேதி கையொப்பம் இட்டுள்ளனர்
.