ஏப்ரல் 26ல் திருத்தந்தை 5 பேரை புனிதர்களாக அறிவிப்பார்.230409.
ஏப்ரல் 26 , வருகின்ற ஞாயிறன்று திருத்தந்தை முக்திப்பேறு பெற்ற 5 பேரை புனிதர்களாக அறிவிப்பார்
. இந்நிகழ்ச்சிக்கான திருப்பலி வழிபாடு தூய பேதுரு பசிலி்க்காவில் நடைபெற உள்ளது .
புனிதர்
பட்டம் பெற உள்ளவர்கள் மகளிர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலியைச் சேர்ந்த தந்தை ஆர்க்காஞ்சலோ
தாதினி ,
மகளிர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலியைச் சேர்ந்த தந்தை பெர்நார்தோ
தோலேமே ,
போர்த்துக்கல் நாட்டின் கார்மேல் மாதா துறவு மடத்தைச் சேர்ந்த அருள்
சகோதரி மரியா ஆல்வாரஸ் பெரேரா ,
மகளிர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலியைச்
சேர்ந்த ஜெர்த்ரூத் கத்தரீனா கோமென்சோலி ,
மற்றும் மகளிர் துறவு மடத்தைத் தோற்றுவித்த
இத்தாலியைச் சேர்ந்த கத்தரீனா வோல்பிச் செல்லி ஆகியோராவர் .