2009-04-22 15:15:06

வன்னிப் பகுதியில் காணப்படும் மனிதத் துன்பங்கள் தாங்கிக் கொள்ள முடியாதவை, காரித்தாஸ் இயக்குனர்


ஏப்.22,2009. இலங்கையில் போர் இடம் பெறும் வன்னிப் பகுதியில் காணப்படும் மனிதத் துன்பங்கள் தாங்கிக் கொள்ள முடியாதவை என்று அந்நாட்டு காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு டேமியன் பெர்னாண்டோ கூறினார்.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமிடையே தினமும் கடும் சண்டை நடைபெறும் பகுதியில் பல சிறார் சிக்கியுள்ளனர் என்றுரைத்த அக்குரு, தொடர்ந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள், தொடர் குண்டுவீச்சு தாக்குதல்களை எதிர் நோக்குகின்றனர் என்று கூறினார்.

காயமடைந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை, வாரக் கணக்காக மக்களுக்குச் சிறிதளவு உணவும் தண்ணீருமே கிடைக்கின்றன என்றும் காரித்தாஸ் இயக்குனர் தெரிவித்தார்.

சண்டையிடும் இருதரப்பினரும் அப்பாவி பொது மக்களின் துன்பங்களைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இலங்கையில் சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு ஐ.நா. தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேம்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.