புனித அன்செல்ம் இறந்ததன் 900மாம் ஆண்டையொட்டி பெனடிக்டன் திருத்தந்தை வாழ்த்து
ஏப்.21,2009. புனித அன்செல்ம் இறந்ததன் 900மாம் ஆண்டு இன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி
பெனடிக்டன் துறவு சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் அருள்திரு நோட்கெர் வோல்ப்க்குச் சிறப்பு
செய்தி ஒன்றை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ளார்.
1033ல் பிறந்து 1109,
ஏப்ரல் 21ம் தேதி இறந்த புனித அன்செல்ம் என்ற துறவி திருச்சபைக்கு ஆற்றியுள்ள சிறப்புச்
சேவைகளையும் காண்டர்பரியின் பேராயராகப் பணியாற்ற மன்னரால் நிர்பந்திக்கப்பட்ட சூழலிலும்
சிறப்புப் பங்காற்றிய அவரின் உயர் குணத்தையும் பக்தி முயற்சிகளையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
திருத்தந்தை.