இயேசு நிக்கதேமுவிடம், நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது
பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக்
கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத்
தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும் ' என்றார். நிக்கதேம் அவரைப்
பார்த்து, ' இது எப்படி நிகழ முடியும்? ' என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது: ' நீர்
இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்
பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை
நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி
நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்
போது எப்படி நம்பப்போகிறீர்கள்? ' 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத்
தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது
போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெறுவர்.