ஏப்ரல்19, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அகில உலக கத்தோலிக்கரின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
நான்காம் ஆண்டு நிறைவு நாள். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19 உரோம் நேரம் மாலை 5மணி 50 நிமிடங்களுக்கு
சிஸ்டீன் சிற்றாலயத்தின் புகைக்கூண்டு வழியாக வெண்புகை வந்தது. பின்னர் 6மணி 43 நிமிடங்களுக்கு
கர்தினால் ஜோசப் ராட்சிங்கர் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று வத்திக்கான்
வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் 264வது
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நமது திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்னும்
பல்லாண்டுகள் நற்சுகத்துடன் வாழ்ந்து திருச்சபையை வழிநடத்துமாறு செபிப்போம். அவரை வாழ்த்துவோம்